Thursday 16 March 2017

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

💎காட்டுலே புலியும், வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே.

💎பொங்குற காலத்தில் புளி. மங்குற காலம் மாங்கா
.
💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

💎எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல.

💎தன் காயம் காக்க வெங்காயம் போதும்

💎வாழை வாழ வைக்கும்

💎அவசர சோறு ஆபத்து

💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை

💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

💎சித்தம் தெளிய வில்வம்

💎சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி, சூட்டை தணிக்க கருணை கிழங்கு

💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

💎வாத நோய் தடுக்க அரைக் கீரை

💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

💎பருமன் குறைய முட்டைக்கோஸ்

💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்

"உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்"

நிலவேம்பு - Andrographis paniculata

 Scientific name: Andrographis Paniculata
Tmail: Siriyaa Nangai [சிறியா நங்கை], நிலவேம்பு
English: Green Chirayta

https://en.wikipedia.org/wiki/Andrographis_paniculata

காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோய் பூரண குணம் !!!


ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis Paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.

மனஅழுத்தம் - மனவியல் ரீதியிலான தீர்வு.

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியிலான தீர்வு.