Thursday, 29 November 2018

நல்ல குடும்பம் பற்றி : *-அருட்தந்தை பேசுகிறார்-*

நல்ல குடும்பம் பற்றி :
*-அருட்தந்தை பேசுகிறார்-* மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால்,
அதற்கு என்ன வழி?

மூன்று பண்புகள்:

1.  விட்டுக் கொடுப்பது,
2.  அனுசரித்துப் போவது,
3.  பொறுத்துப் போவது.

இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? *கணவனா? மனைவியா?*
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!” எல்லோரும் ஆவலோடு
மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது
மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?

மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

*“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான்* விட்டுக் கொடுப்பார்கள். *அவர்கள்தான்* அனுசரித்துப் போவார்கள். *அவர்கள்தான்* பொறுத்துப் போவாகள்.”

அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:

“அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்,
அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள்.
அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் அவர்களே!”

அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை
ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

*விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது.*

அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே
உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி.

அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற
*கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை* கவனத்தில் கொள்வோம்.

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் *அறிவாகத்தான்* இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் *உணர்ச்சிகள்* நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம்.
அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது
ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்குக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு நிலைக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தாலும் குடும்பத்தில் அமைதி போய்விடும்.

7.  குடும்ப அமைதி நிலவ, *சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம்* என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் *பொறுத்தலும், மறத்தலும்* அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. ஏனென்றால் *அவரவர் அடிமனமே* தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகும்.

10.  நல்ல குடும்பத்தில் *நன்மக்கள்* தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!

*--தத்துவஞானி வேதாத்திரி மகரிசி--*

Tuesday, 20 November 2018

இப்பிறவியை நன்றியுடன் நினைக்க, நிறைய விஷயங்கள் உள்ளது!

நிச்சியம் இப்படியொரு அனுபவத்தை நீங்கள் சந்தித்திருக்கப் போவதில்லை. தவறாமல் படியுங்கள். நெகிழவில்லை என்றால், என்னைத் திட்டி கமெண்ட் போடலாம்.

சிங்கப்பூரில்,… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்,...
-------------------------------
எங்களுக்கு சப்ளை செய்யும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, பார்வையற்றவர்களுக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்துக்கு நிதி திரட்ட, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நடக்க இருந்த அந்நிகழ்ச்சிக்கு, எனக்கும் அழைப்பு வந்திருந்தது.
அழைப்பை ஏற்று, ஆன்லைனில் என் வருகையை உறுதி செய்தேன். கொஞ்சம் பொழுது போகும். கொஞ்சம் புது மனிதர்களையும் பார்க்கலாம்.!

பல்வேறு துறைகளிலிருந்து, சுமார் 40 பேர் வந்திருந்தார்கள். சில இந்தியர்களும் கூட!

நிகழ்ச்சியில்,... முதலில், சிங்கப்பூரில், பார்வையற்றவர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு வீடியோ காண்பித்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எப்படி உதவி, அவர்கள் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்க முயல்கிறார்கள் என்பது பற்றி! அது ஒரு ஊக்கமும், எழுச்சியும் ஊட்டும்15 நிமிட, கண்திறப்புக் குறும்படம். அதில், பார்வை சரியாக உள்ள சாதாரணமானவர்களும், இந்த பார்வை அற்றவர்களுக்கு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், எப்படியெல்லாம் தங்களால் ஆனதை செய்து, அவர்கள் வாழ்க்கையை இயல்பானதாக ஆக்க உதவுகிறார்கள் என்று, அழகாய் விவரித்திருந்தார்கள். பார்வையற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும் நிறைவையும், திருப்தியையும், வெளிச்சமிட்டுக் காட்டினார்கள்!

அந்த வீடியோ முடிந்தவுடன், ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்ச்சியின் அடுத்த பகுதி பற்றி விளக்கினார்கள்.

அந்தப் பகுதியின் தீம் : "முழு இருட்டில் உணவு உண்பது!"
இந்தப் பதிவு,... இதைப் பற்றியதுதான்.

நாங்கள் 40 பேரும், எங்கள் விரல்களைக்கூட எங்கள் கண்ணால் பார்க்க முடியாத அளவு, கும்மிருட்டான அறையில், எங்கள் இரவு உணவு உண்ணப்போகிறோம்! அடுத்து, வரிசையாக என்னென்ன நடக்கப் போகிறது என்பதை, தெளிவாக விளக்கினார்கள்!

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, அந்த இருட்டு அறையில் எங்கள் நாற்பது பேருக்கும், முறையாக உணவு பரிமாறி, எங்களை விருந்துபசாரம் செய்யப்போவது,...

மூன்று, பார்வையற்றவர்கள் குழு!

ஒரு பார்வையற்ற பெண், இந்த வாலண்டீயர் குழுவின் தலைவி. அவருக்கு உதவியாக இரண்டு பார்வையற்ற ஆண்கள்.!

அந்த தலைவி, எங்களுக்கு இருட்டில் உணவு உண்பது எப்படி, என்பது பற்றி சிறு குறிப்புக்கள் தந்தார். (பார்வையற்றவர்கள் உலகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் "விதி"கள் அவை!).

1) உங்கள் சாப்பாட்டு மேஜையில் பின்வரும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்:

நடுவில் நேரெதிரில் இருக்கும் சாப்பாட்டு தட்டுக்கு,...
(கடிகாரத்தின் சிறிய முள்)
-- 3-மணி (காட்டும்) திசையில்,.. ஒரு ஸ்பூன்!
-- 9-மணி திசையில், ஒரு முள்கரண்டி!
-- 12-மணி திசையில், இன்னொரு ஸ்பூன்!
-- 2-மணி திசையில், காலி கண்ணாடி டம்ளர்!
-- 6-மணி திசையில், மடித்த பேப்பர் டவல்!

2) இரண்டு பெரிய ஜக் (கூஜா) கள், எல்லா மேஜைகளுக்கும், சுற்றில் வரும். அவைகளில், பாத்திர வெளிப்பரப்பு டிசைன் எதுவும் இல்லாமல் வழுவழுவென்றிருப்பதில் குடிநீரும்,.. பாத்திர வெளிப்பரப்பு நெளிநெளியாய் இருப்பதில், ஆரஞ்சு ஜூஸும் இருக்கும்.!

3) அந்த கூஜாக்கள் உங்களிடம் வரும்பொழுது, உங்கள் கிளாஸ் டம்ளரில், நிறையும் அளவு தெரிய, உங்கள் ஆட்காட்டி விரலை உள்ளே நுழைத்து, நீரோ அல்லது ஜூஸோ, உங்கள் விரல்முனையை தொடும்வரை விட்டுக்கொள்ள வேண்டும்! (அளவாக டம்ளரில் விட, இதுதான் வழி!)

டீம் லீடர் பெண் கேட்டார்: "எல்லாருக்கும் புரிந்ததா?"
எல்லோரும் புரிந்தது என்று மரியாதைக்கு சொல்லிவிட்டு, குழப்பம் தீர, அவசரம் அவசரமாக, பக்கத்தில் இருந்தவரிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தோம்!

அடுத்த ஒன்றரை மணி நேரம்,... அந்தக் கும்மிருட்டில்,
எங்களுக்கு கண்-திறப்பு நிகழ்ந்தது!
-------------------------------
நாங்கள் நாற்பது பேரும், சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒரு பார்வையற்றவரால், அந்த கும்மிருட்டு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவரும், (ஒரு குழுவுக்கு-ஒரு மேஜை) மேஜையை சுற்றி இருந்த ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டோம்!

அப்பொழுது,… எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்த விஷயம் இருட்டு அல்ல,... எங்கள் மனத்தில் தோன்றிய, "நாங்கள்தானே உங்களுக்கு இதுபோல் சாதாரணமாக உதவி செய்வோம்,... இப்போது,..!" என்ற எண்ணம் மட்டுமே!

எல்லோரும் அவரவர் மேஜையில்/இருக்கையில் அமர்ந்த பின்னர், அந்த பார்வையற்ற மூவர்-குழுவால், எங்களுக்கு five-course டின்னர் பரிமாறப்பட்டது - வெல்கம் ட்ரிங்க், அப்பிடைஸர், ஸ்டார்ட்டர்கள், மெயின் கோர்ஸ், மற்றும் டெஸெர்ட் கள் !!!!!

இந்த பார்வையற்ற மூவர்-குழுவின் பரிமாறலில், எங்களை மிகவும் பிரமிப்பூட்டிய விஷயம் என்ன தெரியுமா?

நாங்கள் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது, சைவமா அசைவமா என்று குறிப்பிடச்சொல்லி, கேட்கப்பட்டது! நான் இயற்கையாக சுத்த சைவம் என்பதால், அதை தேர்ந்தெடுத்திருந்தேன்!

எங்கள் நாற்பது பேரில் இருந்த ஒரு சில சைவ-உணவு உண்பவர்கள் தாறுமாறாக, வெவ்வேறு மேஜைகளில்/இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும்,... சற்றும் தவறாமல், மிகச் சரியாக, அவர்களுக்கு மட்டும், சுத்த சைவ உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததுதான்!

அதைவிட பிரமிப்பு,... எங்கள் தட்டு காலியாக ஆக,... சரியாக ஒருவர் வந்து, அடுத்து என்ன உணவு வேண்டும் என்பதைக் கேட்டு, தட்டில் தேவையான அளவு நிரப்பிவிட்டுச் சென்றார்! நாங்கள் கொஞ்சம் கூட அடுத்த வாய் உணவுக்காக, காத்திருக்க வேண்டிய அவசியமே வரவில்லை!

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கழித்து,.. எங்களுக்கு முழு திருப்தியுடன், வயிறு நிரம்ப உண்டுவிட்டோமா என்று, பரிமாறல்-குழுவின் தலைவி கேட்டு, அதை, உறுதி செய்துகொண்டவுடன்,...

அறையின், விளக்குகளை ஆன் செய்தார்!

நாற்பதில், ஒருவர் தவறாமல்,
கண்ணில் நீருடன், அந்த அறையை விட்டு வெளியே வந்தோம்!

வயிறு நிறைந்தது.! கண் திறந்தது!
-------------------------
இருவிழிகளில் பார்வையைப் பெற்று, இந்த அழகான உலகைக் காணும் பாக்கியம் பெற்ற நாம், எவ்வளவு அதிருஷ்டம் செய்தவர்கள்,...

என்பதை உணர்ந்தோம்!

அதைவிட முக்கியமாக,... பார்வை இல்லாமல் வாழ்வோரின் வாழ்க்கை, எவ்வளவு சிரமமானது எனும் கண்திறப்பு, எங்கள் மரபணுவில் பதிந்தது! வெறும் இரண்டு மணி நேரம் இருட்டில் இருக்கவே இவ்வளவு சிரமம் என்றால், வாழ்நாள் முழுவதும், அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்கள், சிக்கல்கள், எவ்வளவு இருக்கும், என்று சுலபமாக உணர முடிந்தது!

எங்களுக்கு இயற்கையாக அமையப் பெற்ற பல அதிர்ஷ்டமான விஷயங்களின் அருமையை உணராமல், இன்னமும் இது வேண்டும், அது வேண்டும், என்று அற்ப விஷயங்களுக்காக தேடி, ஓடி, நொந்து, அழுது, விரக்தியுடன் வாழும் வாழ்வின் விசித்திரத்தை,... புரிந்து கொண்டோம்!

உள்ளவைகளுக்கு நன்றியுடன் இல்லாமல்,
இல்லாதவைகளுக்கு குறை சொல்லும்
நன்றி கெட்டத்தனத்தை வெட்கத்துடன் மனதில் பதித்தோம்!!

புது மனிதராக, வாழ்வின் புதுப்பாதையின் ஆரம்பத்தில்,
எங்களைக் கொண்டு நிறுத்தி விட்டுச் சென்றனர், அந்த மூவர்!
-------------------------------
சந்தோஷமாக வாழுங்கள்!
சந்தோஷப்பட உங்கள் வாழ்வில் நிறைய இருக்கிறது!

நன்றியுடன் இருங்கள்!
இப்பிறவியை நன்றியுடன் நினைக்க,
நிறைய விஷயங்கள் உள்ளது!

Monday, 19 November 2018

எது கெடும் ?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

Friday, 30 March 2018

தினம் ரூபாய் 86400/-

ஒரு சின்ன கற்பனை.
விருப்பமுடன் படியுங்கள்

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.

அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் " உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி -
"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை-
நிதர்சனமான உண்மை😀😀

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் -
#காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக 86400
வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்தம் புதிதாக நம்கணக்கில் 86400 வினாடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86400
வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு
வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?
வாழ்க்கை என்பது ஒருமுறை தான் அதை மகிழ்ச்சியுடனும் , உறவுகளுடனும் , மனிதனேயத்துக்கு  ஏற்ற வாழ்க்கையாக வாழ்வோம் !
🕛🕐🕑🕒🕓🕔🕕🕖🕗🕘🕙🕚
வாழ்க்கையை வாழவே பணம் தேவை , பணத்தை சேர்க்க வாழ்வு அல்ல !
காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.🏃
சந்தோஷமாகஇருங்கள் -
மீண்டும் பிறப்போம் என்பது நிச்சயம் இல்லை , மீண்டும் அம்மா,அப்பா, சகோதரர்கள் ,சகோதரிகள் ,நண்பர்கள் ,உறவுகள் வருவது இல்லை !
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - 🌈

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்....

Monday, 29 January 2018

Cockroach Theory by Sunder Pichai



A beautiful speech by Sundar Pichai - an IIT-MIT Alumnus and Global Head Google Chrome:

The cockroach theory for self development

At a restaurant, a cockroach suddenly flew from somewhere and sat on a lady. She started screaming out of fear. With a panic stricken face and trembling voice, she started jumping, with both her hands desperately trying to get rid of the cockroach.

Her reaction was contagious, as everyone in her group also got panicky. The lady finally managed to push the cockroach away but ...it landed on another lady in the group. Now, it was the turn of the other lady in the group to continue the drama.

The waiter rushed forward to their rescue.

In the relay of throwing, the cockroach next fell upon the waiter. The waiter stood firm, composed himself and observed the behavior of the cockroach on his shirt. When he was confident enough, he grabbed it with his fingers and threw it out of the restaurant.

              Sipping my coffee and watching the amusement, the antenna of my mind picked up a few thoughts and started wondering, was the cockroach responsible for their histrionic behavior?

If so, then why was the waiter not disturbed?

He handled it near to perfection, without any chaos.

It is not the cockroach, but the inability of those people to handle the disturbance caused by the cockroach, that disturbed the ladies.

I realized that, it is not the shouting of my father or my boss or my wife that disturbs me, but it's my inability to handle the disturbances caused by their shouting that disturbs me.


It's not the traffic jams on the road that disturbs me, but my inability to handle the disturbance caused by the traffic jam that disturbs me.

More than the problem, it's my reaction to the problem that creates chaos in my life.

Lessons learnt from the story:

I understood, I should not REACT in life.
I should always RESPOND.


The women reacted, whereas the waiter responded.

Reactions are always instinctive whereas responses are always well thought of.

A beautiful way to understand............LIFE.

Person who is HAPPY is not because Everything is RIGHT in his Life..

He is HAPPY because his Attitude towards Everything in his Life is Right..!!

Wednesday, 24 January 2018

மன முதிர்ச்சி என்றால் என்ன ?

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது.

2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வது.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்களது கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்ளுதல்.

5. மற்றவரிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

7. நம் புத்திசாலிதனத்தை மற்றவரிடம் நிரூபிப்பதை விடுவது.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

10. எதற்க்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியுடன் வைத்துக்கொள்ள முயற்சிசெய்தல்.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் விருபுவனவற்றிக்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல். 
  

Thursday, 4 January 2018

உன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...


ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்...

அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது.

அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு.

இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது.

அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன.

மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.

மான் தன் இடப்பக்கம் பார்த்தது.

அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.

மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்?

அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது.

என்ன நடக்கும்?...

மான் பிழைக்குமா?...

மகவை ஈனுமா?...

மகவும் பிழைக்குமா?...

இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...

வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...

புலியின் பசிக்கு உணவாகுமா?...

பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.

மான் என்ன செய்யும்?...

மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.

ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை.

அப்போது நடந்த நிகழ்வுகள்...

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.

அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது.

தீவிர மழை, காட்டுத் தீயை அழித்து விடுகிறது.

அந்த மான், அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது.

நம் வாழ்விலும், இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.

அல்லது வரும்.

அச்சூழலில், பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்.

சில எண்ணங்களின் பலம், நம்மை வீழ்த்தி, அவை வெற்றி பெற்று, நம்மை வெற்றிடமாக்கும்.

நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்.

அந்த மானின் கவனம் முழுவதும், மகவைப் பெற்றிடுவதிலேயே இருந்தது.

மற்ற எதையும் அது பொருட்படுத்தவில்லை. அது அதன் கை வசமும் இல்லை.

மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்திருந்தால், மகவும் மானும் மடிந்து போயிருக்கும்.

இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...

எதில் என் கவனம்?

எதில் என் நம்பிக்கையும் முயற்சியும் இருக்க வேண்டும்?

வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.

அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்.

கடவுள் தூங்குவதும் இல்லை...

நம்மை துயரப்படுத்துவதும் இல்லை...

உன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்.