Thursday 15 June 2017

ஒப்பிடுதல் என்பது மகிழ்ச்சியின் எதிரி

நான் காலையில் ஜாகிங் சென்றுகொண்டிருந்தேன்; அரை கிலோமீட்டர் முன்னால் ஒரு நபர் என்னை விட சிறிது மெதுவாக செல்வதை கவனித்தேன். அவரை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் செல்லும் பாதை திரும்ப இன்னும் ஒரு கிலோமீட்டர் இருந்தது. வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்தில் மிகவும் நெருங்கி விட்டேன்; என் வேகத்தை இன்னமும் அதிகப்படுத்தினேன்.

அக்காட்சியை கண்டவர்கள், நான் ஒலிம்பிக் போட்டியில் இறுதிக் கட்டத்தில் ஒடுவதாக எண்ணியிருப்பார்கள். அவரை பிடித்து விடுவதில் மிகவும் கவனமாக இருந்தேன்.கடைசியாக அவரை பிடித்துவிட்டேன். மனதினுள் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி! ஆனால், நான் போட்டி போட்ட நபருக்கு அந்த விஷயமே தெரியாது!

அவரை கடந்து சென்ற பிறகு தான், நான் திரும்ப வேண்டிய இடத்தை தாண்டி வந்ததை உணர்ந்தேன்.அப்பொழுதுதான் எனக்கு ஒரு பேருண்மை புரிந்தது…

வாழ்க்கையிலும் இப்படித்தான்… நாம், குடும்பத்தினருடனும், சக ஊழியருடனும், நண்பர்களுடனும், அண்டை வீட்டாருடனும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறோம்… அல்லது அவர்களை விட செல்வாக்கிலும், வசதிகளிலும் பெரியவராக காட்ட விரும்புகிறோம்… இந்த போராட்டத்தில், நம்மை சுற்றி நடக்கும் சந்தோஷங்களை அனுபவிக்க மறந்து விடுகிறோம்…

நாம் நமது நேரத்தையும் ஆற்றலையும் தேவை இல்லாத போட்டிகளில் கழித்து, நமது வாழ்வின் இலட்சியத்தின் பாதையை மறந்து விடுகிறோம். இந்த ஆரோக்கியமற்ற போட்டி ஒரு முடிவில்லாத சுழற்சியாகும்.

எப்பொழுதும், யாரோ ஒருவர் உங்களை விட ஒரு நல்ல வேலையோ, நல்ல வாகனமோ, வங்கியில் அதிக பணமோ, அதிக கல்வியோ, அழகிய மனைவியோ, நல்ல கணவரோ, சிறந்த குழந்தைகளோ, சிறந்த சூழ்நிலையிலோ இருக்கக்கூடும்… 'நீங்கள் யாருடனும் போட்டியிடாதபோது, உங்கள் முழு திறமையையும் வெளியே கொண்டு வந்து மிக சிறந்தவராக இருக்க முடியும்.

*சிலர் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதற்க்கு காரணம்… மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு போகிறார்கள், என்ன அணிகிறார்கள், எந்த வண்டி ஓட்டுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதே… உங்களிடம் என்ன உள்ளதோ அதை அப்படியே ஏற்று கொள்ளுங்கள்… உயரம், நிறம், வசதி, வாய்ப்பு … வாழ்க்கையில் விதியின் மீது போட்டி இல்லை…

1 comment: