Wednesday 22 February 2017

நட்பு உயிரை விட மேலானது !

ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது.

* அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான்.

*உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி.

* அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது.

* நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான்.

*அந்த மனித குரங்கு, கவலை படாதே நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன்.

*என்னை அண்டி வந்த உனக்கு பாதுகாப்பு தருவேன் என்றது.

இரவு பொழுதும் வந்தது....

*புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது.

* மனிதனும் மனிதகுரங்கும் மாறி மாறி உறங்க முடிவு செய்தனர்.

* மனிதன் தூங்கிய போது குரங்கு காவல் காத்தது குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான்.

* புலி இவர்களை பிரித்தாலன்றி நமக்கு உணவு கிடைக்காது என எண்ணி மனிதனிடம்....வஞ்சகமாக ....
“இப்போது மனிதகுரங்கு தூங்குகிறது நீ அதை பிடித்து கீழே தள்ளிவிடு.....எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.

*மனித மனம் குரங்கை விட மோசமானது.

*நாம் தப்பிக்கலாம் என்று தன்னலம் கருதி மனிதன் குரங்கை கீழே தள்ளிவிட்டான்.

*கீழே விழும்போது நடந்ததை புரிந்த கொண்டது குரங்கு.

 ஆனால் புலியோ “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும்....உனக்கு மனிதனின் இயல்பை புரிய வைக்கவே இவ்வாறு கூறினேன்.

*இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன்....நீ மேலே சென்று மனிதனை கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டுவிட்டு போய்விடுகிறேன்” என்றது.

* அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது.

* மனிதனோ பயத்தால் நடுங்கினான்.

*மனித குரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் காப்பேன்.

* புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக்கொண்டேன்.

* நீ கவலை இல்லாமல் இருக்கலாம்....” என்றது.

🌻நண்பன் என்று வந்தவனிடம்
நட்பு பாராட்டவேண்டும்.

🌻நட்பு கற்பை போன்றது.

🌻ஒருமுறை நட்பின் புனிதத்தில் குறை கண்டோமே ஆயின் அந்த நட்பு அதன் மதிப்பை இழந்தே போகும்..!



                                          நட்பு உயிரை விட மேலானது!

No comments:

Post a Comment