Tuesday, 27 July 2021

வீட்டு வைத்தியம் !

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.


சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும…்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.


தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.


பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.


குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

கவிழும் கப்பலின் அந்தரத்தில் !

 "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது.*l

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்.

கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....

இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???"

என்று மாணவர்களை நோக்கி இந்த கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

'நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,

'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாம கழிச்சிருக்கோம்' னு...

வாழ்க்கை குறுகியது, 

ஆனால் அழகானது...

சஹாதேவனின் ஜோதிடத்தை மாற்றிய பரமாத்மா ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

 சஹாதேவன் வருத்தமாக, அமர்ந்திருப்பதைக் கண்ட வாசுதேவர்

இளவரசே சஹாதேவா !!

நீ ஏன் வருத்தமாக இவ்வனத்தில் அமர்ந்திருக்கிறாய் !!

அத்தை  குந்தி பூஜைக்கு மலர்கள் கொய்யசென்ற ,உன்னை காணவில்லை என்ற வருத்தத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்.

உன் வருத்தத்திற்கு காரணம் என்ன உன்னை வணங்கிவிட்டு சொல்கிறாரே யார் அவர் ?

பணிகிறேன் வாசுதேவரே நம் அஸ்தினாபுரத்தின் பிரஜை அவர், தன் ஜாதகத்தை கணித்து, அவரின் திருமணத்திற்கு, ஒரு நல்ல முகூர்த்த நாள் குறித்து தரச் சொன்னார்.

அதற்காகவா வருத்தப்படுகிறாய் சஹாதேவா ?

இல்லை வாசுதேவரே! அவரின் ஆயுட்காலம் மிகவும் குறைவாக உள்ளது .

அதனால் நாளை வா கணித்துக்  கூறுகிறேன் என்று ,அவரை அனுப்பி விட்டேன்"

ஆனால் சஹாதேவா ! விதி முடிந்தால் அனைவரும் இப்புவியுலக வாழ்க்கையை முடித்துக் செல்லத்தானே வேண்டும்? இதில்  யாரும் விதிவிலக்கல்ல

ஏதாவது பரிகாரம் இருக்குமே !

கூற வேண்டியது தானே!! .சஹாதேவா.!

உண்மைதான் வாசுதேவரே! ஆனாலும் என் மனம் ஏதோ ஒன்றை எண்ணி ,கணக்கிறது.

அவர் முப்பிறவியிலும் எப்பாவத்திற்கும் ஆளாகாதவர் !

மேலும் ,அப்பிரஜை இப்பிறவியிலும் இம்மியளவு கூட ,அறநெறி தவறாது வாழ்ந்து வருபவர்.

இவர் போன்றோர் எல்லாம் காரணமின்றி இறக்க நேரிட்டால் ,அறநெறி போற்றி வாழ்ந்து என்ன பயன் வாசுதேவரே 

முதலில் பரிகாரம் என்னவென்று கூறு !

அவரின் ஆயுளை நீட்டிக்க முடிகிறதா? என்று பார்ப்போம்.

இயலாது வாசுதேவரே! 

நான் ஏற்கனவே, உங்களிடம்  பரிகாரத்திற்கான, நேரம் அவரிடம் இல்லை என்றேனே!

காலனையும் காலத்தினால் கணப்பொழுது காத்திருக்க வைக்க முடியும் சஹாதேவா ! 

பரிகாரத்தை முதலில் கூறு 

அவரின் ஜாதகத்தின்படி ஒரு கோயிலைக் கட்டி, குடமுழுக்கு அவரே செய்தார் என்றால் ,அவர் தீர்க்காயுள் பெற்று ,வாழ்வாங்கு வாழ்வார் . 

மேலும் அப்பிரஜையின் மரணம் இன்று நடு ஜாமத்தில் நிகழப்போகிறது.! 

எப்படி அவரால் இந்த பரிகாரத்தை நிறைவேற்ற முடியும் மாதவா!?

சஹாதேவா விதி பலன் எதுவோ அது நடக்கட்டும் அங்கு அத்தை குந்தி பூஜைக்காக காத்திருப்பார் செல்வோம் வா!

மறுநாள் அதிகாலையில் சஹாதேவன் அந்த பிரஜையை அரண்மனை வாயிலில் கண்டவுடன், ஆனந்த அதிர்ச்சியுற்றான்.

சஹாதேவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. 

நான் கணித்தது இதுவரை பொய்த்ததில்லையே !

அப்படி இருக்க இவர் எவ்வாறு உயிரோடு இருக்கிறார் ! 

இது எப்படி சாத்தியம் என்று எண்ண ஓட்டங்களில் மனம் மூழ்கியது.

ஹஸ்தினாபுரத்து பிரஜையே நேற்று நீங்கள் என்னை வந்து, சந்தித்து சென்றபின் நடந்தவற்றை மறைக்காமல் கூறுங்கள் என்றார் சஹாதேவன்.

இளவரசர் சகாதேவரே என் இல்லத்திற்கு திரும்பும் வேளையில்

கண்ணுக்கு புலப்படாத காரிருள் மேகங்கள் வானில் தோன்றி பகலவனை திடீரென மறைத்து விட்டான்.

பெரு மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது!! 

மின்னல் கீற்றுகள் வானை கிழித்துக் கொண்டிருந்தன!!!

இடியோசை காதால் கேட்க முடியாத அளவிற்கு இருந்தது.!!!

சூறாவளிக் காற்று சுழன்று அடித்தது

இறைவனை மனதில் எண்ணிக்கொண்டு, அங்கிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில், இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சி ஒதுங்கினேன்.

கூர்ந்து கவனித்தேன் அது பாழடைந்த மண்டபம் அல்ல. 

சிதிலமடைந்த கோவில்

என் மனதில் கோயிலில் பழுதடைந்த பகுதிகளை கட்டுமான பொருட்களை கொண்டு சீர் செய்வதாக நினைத்து பார்த்தேன். 

கோவிலின் முழுத் தோற்றமும் குறையின்றி கண்ணுக்கு புலப்பட்டது. 

என் எண்ணங்களாலேயே கோயிலுக்கு வண்ணமிட்டு, கர்ப்பகிரகத்தை பிரதிஷ்டை செய்து ,கோயிலின் பணிகள் அனைத்தையும் முடித்து, குடமுழுக்கும் நடத்தி வைப்பது போன்ற நினைத்து பார்த்தேன்.

சற்றே அயர்ந்து விட்டேன் இளவரசே !

இரவு பொழுது நீங்கி கதிரவன் உதித்து விட்டான்.

என் இல்லத்திற்கு செல்லாமல் ,என் மண நாளை தங்களிடம் குறித்துக்கொண்டு 

பின் இல்லம் செல்லலாம் என்று தங்களைக் காண வந்துவிட்டேன் இளவரசே!

இதனைக்கேட்ட சஹாதேவன், ஆனந்த அதிர்ச்சியுற்று பிரஜையின் மண நாளை குறித்துக் கொடுத்து, அவரை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அப்போது அங்கு புன்னகையுடன் வந்த பரமாத்மாவை வணங்கி!!

 வாசுதேவரே ! பரிகாரம் ஏதும் செய்யாமலே ,நேற்று நான் கூறிய பிரஜை வந்து மண நாள் குறித்து சென்றார்.

அது  எப்படி சாத்தியம் 

சாஸ்திரங்கள் பொய்த்தது இல்லையே? 

அப்புறம் எப்படி உயிரோடு உள்ளார் வாசுதேவரே?

சஹாதேவா அப்பிரஜை  நேற்று அவர் எங்கு இருந்தார்? 

என்ன செய்தார்?

சிதிலமடைந்த கோயிலில் அப்பிரஜை தங்கி, அதனை தன் நினைவாலேயே சீர் செய்து, குடமுழுக்கும் செய்திருக்கிறார் வாசு தேவரே !

சஹாதேவா கவனமாக கேள்!!! 

இறைவன் அவரின் அர்ப்பணிப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டார் ; 

எவ்விதத்திலும் இறைவனை வழிபடலாம் ;

இறைவனை பற்பல வழிகளில் பக்தர்கள் ஆராதிக்கின்றனர்; அனைவரிடமும் எவ்விதத்திலும் பாகுபாடு பாராட்டாதவர் இறைவன்.

செல்வ செழிப்பில் திளைப்பவர் முதல் ஆண்டி வரை அனைவரும் இறைவனுக்குச் சமமானவரே .

அவர் பக்தர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபடுத்திப் பார்ப்பதில்லை.

நேர்த்திக்கடன்கள் பல்லாயிரக்கணக்கான முறைகளில் இறைவனுக்கு செலுத்தப்படுகிறது. 

அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து தான், அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ரட்சிக்கிறான் இறைவன். 

அதன்படி அப்பிரஜையின் மனக் கோயிலை ஏற்று  அவரின் ஆயுளை நீட்டித்து, இருக்கிறார் இறைவன்.

உண்மைதான்  வாசுதேவரே! அனைவரும் இறைவனுக்கு சமம்.

ஆனால் அப்பிரஜை கூறிய சிதலமடைந்த கோயில் இங்கு இல்லையே?

உண்மைதான் சஹாதேவா! அப்பிரஜை ஒதுங்கிய இடத்தை சிதிலமடைந்த கோயிலாக மனதில் எண்ணி, தன் எண்ணத்தினால் சீர் செய்து, குடமுழுக்கும் நடத்தியிருக்கிறார் "**

அவர் நிறுவியது மனக்கோயில்.

இதனை இறைவன் முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரின் ஆயுளை நீட்டித்து விட்டார். 

பக்தர்கள் விரும்பும் வண்ணம் எவ்விதத்திலும் இறைவனை வழிபடலாம் சகாதேவா! 

மனதில் சிதிலமடைந்த கோவில் தோன்ற ,வாசுதேவர் தான் காரணமாக இருக்க முடியும் என, சஹாதேவன் நினைக்க 

வாசுதேவரோ! சகாதேவனை பார்த்து, வதனச்சிரிப்பு சிரிக்க, பரந்தாமனின் அருளை எண்ணி, பணிந்து வணங்கினான் சஹாதேவன்.

பரமாத்மா நினைத்தால் ஷண நேரத்தில் நம் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும்.


ஜெய் ஸ்ரீராம்

தொப்புள் !

 நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு.

62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டு விட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்….

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். 

தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது….

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான்.

அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன….

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். 

தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட….

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. 

நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்…

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு,  முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்….

கண்கள் வறட்சி நீங்க, குறைந்த பார்வை சரியாக.. பளபளப்பான தலைமுடி பெற... மெருகூட்டப்பட்ட  சருமம் பெற...

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்…..

முழங்கால் வலி குணமடைய

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்….

நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட, சருமத்திலிருந்து நிவாரணம் பெற...

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி  கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்….

தொப்புளில் ஏன் எண்ணெய் விட வேண்டும்?…

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். 

அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது….

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும்..

Thursday, 5 November 2020

கஷாயம்

# திங்கட்கிழமை:

வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.


#செவ்வாய்க்கிழமை:

கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.


# புதன்கிழமை:

தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.


# விழயாகிழமை:

சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.


# வெள்ளிக்கிழமை:

வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.


# சனிக்கிழமை:

முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.


# ஞாயிற்றுக்கிழமை:

சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.


இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 கணியன் #பூங்குன்றனார் 

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி 

சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் இது.


 யாதும் ஊரே யாவரும் கேளிர்


இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.

பாடலின்

எல்லா வரிகளும் வாழ்வின்

முழு தத்துவத்தைச் 

சொல்கிறது.


முழு பாடலும் அதன் பொருளும்👇.


"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,

தீதும் நன்றும் பிறர்தர வாரா,

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,

சாதலும் புதுவது அன்றே,

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, 

முனிவின் இன்னாது என்றலும் இலமே 

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்

ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


பொருள்👇


"யாதும் ஊரே யாவரும் கேளிர்" 


எல்லா ஊரும் எனது ஊர்.

எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று

வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா"


'தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை' எனும் உண்மையை உணர்ந்தால்

சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.


"நோதலும் தனிதலும்

அவற்றோ ரன்ன"


துன்பமும் ஆறுதலும் கூட

மற்றவர் தருவதில்லை.

மனம் பக்குவப்பட்டால்,

அமைதி அங்கேயே கிட்டும்.


"சாதல் புதுமை யில்லை"


பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,

இறக்கும் நாளும் ஒன்று உண்டு.

இறப்பு புதியதல்ல. அது

இயற்கையானது.

எல்லோருக்கும்

பொதுவானது.

இந்த உண்மையை

உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்

எதற்கும் அஞ்சாமல்

வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.


"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே

முனிவின் இன்னாது என்றலும் இலமே"


இந்த வாழ்க்கையில்

எது, எவர்க்கு, எப்போது,

என்ன ஆகும் என்று

எவர்க்கும் தெரியாது.

இந்த வாழ்க்கை மிகவும்

நிலை அற்றது.

அதனால், இன்பம் வந்தால்

மிக்க மகிழ்வதும் வேண்டாம்.

துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.

வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.


"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்"


இந்த வானம் நெருப்பாய்,

மின்னலையும் தருகிறது.

நாம் வாழ 

மழையையும்

தருகிறது. இயற்கை வழியில் அது அது

அதன் பணியை செய்கிறது.

ஆற்று வெள்ளத்தில்,

கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல,

வாழ்க்கையும், சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன் வழியில்

அடிபட்டு போய்கொண்டு

இருக்கும்.

இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.


"ஆதலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"


இந்த தெளிவு

பெற்றால்,

பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து

மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.

சிறிய நிலையில் உள்ள

சிறியவர்களைப் பார்த்து

ஏளனம் செய்து இகழ்வதும்

வேண்டாம்.

அவரவர் வாழ்வு

அவரவர்க்கு

அவற்றில் அவரவர்கள்

பெரியவர்கள்.


Wednesday, 4 November 2020

கோபம் எதனால் வருகிறது ..!!

 கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது..!!


அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். 


ஒருவர் கூறினார், 


நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. 


நான் ஒன்று சொன்னால், 

அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.

இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.


மற்றொருவர், 


யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். 


அடுத்தவர், 


நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். 


இன்னொருவர், 


சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். 


வேறொருவரோ, 


நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். 


இப்படி ஒவ்வொருவரும் 

தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். 


இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.


அது சரி...


நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? 

என்றதற்கு, 


அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். 


கோபம்னா என்ன? 


கோபம் என்பது 

அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு 

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.


அதுமட்டுமல்லாமல்.. 


நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் 


இதே கோபத்துடன் செயல்பட்டால் 


நட்பு நசுங்கி விடும். 

உறவு அறுந்து போகும். 

உரிமை ஊஞ்சலாடும்.


நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன?


சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. 


கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது.


இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. 


இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, 

ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது. 


இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். 

இதே நிலை நீடித்தால் 

ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.


இது பொய்யல்ல. 

சத்தியமான உண்மை இது. 


இதெல்லாம் நீங்க சொன்னீங்க...

உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு 

நீங்க சொல்றதும். 


அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது... 

அப்படி வாங்க வழிக்கு. 


அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். 


முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. 


அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. 


அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... 


ஈகோ பார்க்காதீங்க... 


நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. 


முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. 

யார்மேல தவறுன்னு சிந்தியுங்க...


கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்.

அப்படி இல்லைன்னா 

அந்த இடத்தை விட்டு நகருங்க...


தனியா உக்காந்து யோசிங்க. 

அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். 


அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. 


அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். 

என்ன நடந்துருச்சு பெருசா. 

என்னத்த இழந்துட்டோம். 

மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. 


அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. 

எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. 


வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் 

என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.


நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது. 


ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. 


அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,

நீங்க 

அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான்.


தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. 

ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.


நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். 

இதில் ஆறாவது அறிவை 

அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க...


கோபம் வரவே வராது. 


நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.


கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். 


வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.